கண் பார்வையற்ற சிறுவனுக்கு வெளியில் தெரியாமல் உதவி செய்த நடிகர் விஜய்…. குவியும் பாராட்டு !!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற கண் பார்வையற்ற சிறுவனுக்கு நடிகர் விஜய் உதவி செய்ததாக அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மா.க.பா.ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான வரும் விஜய் அவ்வப்போது பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த விஜய் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி அளித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று உதவி செய்திருந்தார். அதேபோல் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சத்தை தனது ரசிகர்கள் வாயிலாக கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஒரு பார்வையற்ற சூப்பர் சிங்கர் பாடகருக்கு உதவி செய்திருக்கிறார். முன்னதாக பாடகர் செந்தில் நாதன் கடந்த 2014-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது தான் நடிகர் விஜய்யின் ரசிகர் என மேடையிலேயே கூறியிருந்தார்.
இதைப்பார்த்த விஜய் அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது அவருக்கு விலையுயர்ந்த ஐ-போடு உள்ளிட்டவற்றை பரிசுப் பொருளாக கொடுத்து உதவி செய்துள்ளார். அப்போது நடிகர் மா.கா.பா ஆனந்த் உடனிருந்துள்ளார்.
மேலும் விஜய் தான் செய்த இந்த காரியத்தை தொலைக்காட்சியில் சொல்லிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.. இது நீண்ட நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாக மா.க.பா.ஆனந்தி தெரிவித்தார்.