Asianet News TamilAsianet News Tamil

கொடூரமானது அனுபவம்...! 18 மணிநேரம் குடும்பத்துடன் உயிருக்கு போராடியது..! உருக்கமாக கூறிய நடிகர் ஜெயராம்..!

கேரள மழை வெள்ளத்தில் நடிகர் - நடிகைகள் பலர்  சிக்கினார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்திவிராஜ் வீட்டில் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பிருதித்விராஜ் தாயார் மல்லிகா சுகுமாரனை, பெரிய வெண்கல அண்டாவில் வைத்து மீட்டனர் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள்.
 

actor jayaram about flood
Author
Chennai, First Published Aug 21, 2018, 5:41 PM IST

கேரள மழை வெள்ளத்தில் நடிகர் - நடிகைகள் பலர்  சிக்கினார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்திவிராஜ் வீட்டில் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பிருதித்விராஜ் தாயார் மல்லிகா சுகுமாரனை, பெரிய வெண்கல அண்டாவில் வைத்து மீட்டனர் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள்.

actor jayaram about flood

அதே போல் நடிகை அனன்யாவின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் இவர் தன்னுடைய தோழி ஆஷா சரத் வீட்டில் தஞ்சம் அடைந்தார். 
இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவி, மகளுடன் காரில் சென்றபொது உயரத்தில் இருந்து மண்ணும் கற்களும் சரிந்து விழுந்து சாலையை மூடியது. இதில் கார், லாரி, வேன், போன்ற பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன. அதில் ஜெயராமின் வாகனமும் சிக்கியது. இதனால் தன்னுடைய மனைவி, மகளுடன் வெளியே வரமுடியாமல் தவித்தார் நடிகர் ஜெயராம்.

actor jayaram about flood

இந்த நிலசரிவில் சிக்கித் தவித்த அனுபவம் குறித்து நடிகர் ஜெயராம் கூரியது..." நானும் எனது மனைவி, மகளும் நிலச்சரிவில் சிக்கியது மிகவும் கொடுரமான அனுபவம்.  18 மணிநேரம் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவதிப்பட்டோம். போலீசார் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர். 

actor jayaram about flood

மூன்று நாட்கள் போலீஸ் குடியிருப்பில் தான் தங்கி இருந்தோம். இதற்காக காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக உணவு பொருள்களுடன் செல்கிறேன். குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள், மருந்துகள், நாப்கின் அதிகம் தேவைப்படுகிறது. உதவி செய்பவர்கள் அவற்றை கொடுங்கள் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios