இந்திய பங்குசந்தையை புரட்டி போட்ட மோடி ..!! 500, 1000 ரூபாய் நோட்டு எதிரொலியால் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி....!!!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்றும் நாளையும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால் இதன் தாக்கம் , இந்திய பங்குசந்தையில் பெரிய மாற்றத்தை கொண்டுள்ளது. அதாவது , கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது இந்திய பங்குசந்தை .....!
மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகம் தொடங்கியுள்ளது.
அதே சமயத்தில், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 315 புள்ளிகள் குறைந்து இன்றைய இந்திய பங்குவர்த்தகம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெர்க்க தேர்தல் முடிவு வெளியாகும் வரை , உலக சந்தையில் மாற்றம் வரும் என எதிர்பார்கப்படுகிறது.