வயகரா மருந்து சாப்பிட்டு ஒரு வாரம் காம வெறியில் அலைந்த ஆடுகள்..!! கதறிய கட்டுத்தறிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 12, 2019, 12:35 PM IST
Highlights

அந்த ஆடுகள் பாலியல் வெறி பிடித்தவர்களைப்போல நடந்து கொண்டதாகவும் மந்தையில் இருந்த  சக ஆடுகளுடன் மாறிமாறி உறவில் ஈடுபட்டதை கண்டு ஆடு மேய்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .  

தவறுதலாக வயகரா கலந்த நீரைப்  பருகிய ஆடுகள் ஒரு வாரத்துக்கும் மேலாக கட்டுப்பாடற்ற பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது .  தெற்கு அயர்லாந்தில் செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களது செம்மறி ஆடுகள் தொடர்ச்சியாக பாலியல் செயலில் ஈடுபடுவது கண்டு  குழப்பத்தில் ஆழ்ந்தனர். 

அந்த ஆடுகள் பாலியல் வெறி பிடித்தவர்களைப்போல நடந்து கொண்டதாகவும் மந்தையில் இருந்த  சக ஆடுகளுடன் மாறிமாறி உறவில் ஈடுபட்டதை கண்டு ஆடு மேய்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .  இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள்  ஆடுகள் வழக்கமாக பருகும்  நீரை சோதனை செய்த போது அதில் வயாகரா கழிவுகள் கலந்து இருப்பது தெரியவந்தது .  இந்த செய்தி உள்ளூர்  ஊடகங்களுக்கு தெரியவர அவர்கள் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் உள்ள மருந்து உற்பத்தி ஆலை சுமார் 755 டன்னுக்கும் அதிகமான வடிகட்ட படாத வயகரா கழிவை ரிங்காஸ்கிடி துறைமுகத்தில் கொட்டியதாக ஒப்புக்கொண்டனர்.   

இந்நிலையில் வயகரா கழிவு நீரை குடித்ததால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் நூற்றுக்கணக்கான குட்டி ஆடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாலியல் உணர்வு குறைய  ஒரு வாரத்திற்கு மேல் ஆனதாகவும், அதுவரை அவைகள்  தீராத உடல்  உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

click me!