உலகின் படுபயங்கரமான பாலியல் அசுரன்... 195 பேரிடம் இச்சையை தீர்த்துக் கொண்ட காமக் கொடூரன்..!

By Thiraviaraj RMFirst Published Jan 7, 2020, 5:34 PM IST
Highlights

உலகின் படுபயங்கரமான ஓரின பாலியல் குற்றவாளி தனது காம இச்சைக்கு 195 வாலிபர்களை இரையாக்கியதற்காக 30 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
 

இந்தோனேசியா நாட்டை சேர்ந்த ரெய்ன்ஹார்ட் சினாகா. 36 வயதான இவரை 30 ஆண்டுகள் சிறையில் அடைத்த நீதிபதி அவரை 'அசுரன்' என்று அழைத்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 136 கற்பழிப்புகள், எட்டு கற்பழிப்பு முயற்சிகள் மற்றும் 48 பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக 15 அநாகரீகமான தாக்குதல்கள் உட்பட 159 வழக்குகளில்  தண்டனை பெற்று உள்ளார். சினாகா 195 வெவ்வேறு ஆண்களைத் தாக்கியதாக வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவர்களில் வீடியோவில் உள்ளவர்களில் 70 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.

லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் புவியியலில் பிஎச்டி படிப்புக்கு சேர்ந்தார். 'பாலியல் மற்றும் அன்றாட நாடு கடந்த விதம்' என்ற  தலைப்பில் தனது ஆய்வறிக்கையின் மேற்பார்வைகளுக்காக தவறாமல் அவர் மான்செஸ்டரில் தெற்காசிய ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் இருபால் ஆண்கள் வசிக்கும் கிராமத்திற்கு சென்று வந்தார்.

இந்தோனேசியாவில் தனது பணக்கார குடும்பத்தின் ஆடம்பர வாழ்க்கை முறையை கடைபிடித்து வந்தார். தொழில் அதிபரான அவரது தந்தை அனுப்பும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். சினாகா ஓரின சேர்க்கையாளர் என்று தெரியாத அவரது பெற்றோர்கள் அவர் திருமணம் செய்துகொண்டு இந்தோனேசியாவிலேயே குடியேற வேண்டும் என்று விரும்பினர். ஆனால் சினாகா அங்கு திரும்ப தயங்கினார்.  இந்தோனேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு  எதிர்ப்பு உள்ளது மற்றும் சில மாநிலங்களில் சட்டவிரோதமானது.

இதுகுறித்து சினாகாவின் நண்பர் ஒருவர் கூறும்போது, சினாகாவின் தந்தை  மிகவும் பணக்காரர். அவர்களுக்கு ஜகார்த்தாவின் மையத்தில் ஒரு மாளிகை உள்ளது. சொந்த ஊருக்கு செல்லும் போது மட்டும் சினாகா மிகவும் நல்லவர் போல் தன்னை மாற்றிக் கொள்வார் என்று கூறினார்.

click me!