தனி அறையில் ஒரு பெண் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது கொடுமை..!! ஆபாச நடிகை மியா கலிபா அதிரடி கருத்து.!!

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2019, 4:20 PM IST
Highlights

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகவே தான் ஆபாசப் படங்களிலிருந்து விலகிக்கொண்டதாக  அவர் தெரிவித்தார்.  அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் பயங்கரவாதத்தை விட பயங்கரமானது  எது என, மியா கலிபாவிடம்  கேட்க, அதற்கு அவர் "ஒரு தனி அறையில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத பெண்களுடன் தனிமையில் இருப்பதுதான்" என தெரிவித்தார்.  

ஒரு தனி அறையில் அறிமுகம் இல்லாத பெண்களுடன் தனிமையில் இருப்பதுதான் பயங்கரவாதத்தை விட மிகக் கொடுமையானது என ஆபாச  நடிகை மியா கலிபா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

ஆபாச திரைப்படங்களில் தோன்றி கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்ச்சியை தூண்டியது மட்டுமல்லாமல் தன் கட்டழகு தேகத்தால் அத்தனை இளைஞர்களையும்  கட்டி வைத்திருந்தவர் மியா கலிபா என்றால் மிகையாகாது. லெபனான் நாட்டை பூர்விகமாக கொண்ட இந்தப் பேரழகி, உலகில்  அதிக இளம் வயது ரசிகர்களை கொண்ட ஆபாச நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். காண்போரை தன் மீது மோகம் கொள்ள வைக்கும் வசிகர தோற்றம் கொண்டவர் மியா என்பதே இதற்கு காரணம். முஸ்லிம்களின் அடையாளமான  பர்தாவை அணிந்து கொண்டு  பாலியல் படங்களில்  தோன்றினார் என்பதற்காக, ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மியா கலிபாவை கொலைசெய்து விடுவோம் என்று மிரட்டியதுடன். அவரின் குடும்பத்தையும் சிதைத்து விடுவதாக எச்சரித்து வந்தனர்.

 

பயங்கரவாதிகளின் இந்த அச்சுறுத்தலுக்கு பயத்து, ஆபாச படங்களில் இனி நடிப்பதில்லை எனகூறி  ஒட்டுமொத்தமாக விலகிக்கொண்டார் மியா கலிபா. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர், ஆபாச படங்களில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் மற்றும் தான் சந்தித்த நெருக்கடிகளையும் அவர் அதில் பகிர்ந்துகொண்டார். பாலியல் தொடர்பாக  நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மியா சுவாரசியமாக  பதிலளித்தார்.  தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகவே தான் ஆபாசப் படங்களிலிருந்து விலகிக்கொண்டதாக  அவர் தெரிவித்தார்.  அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் பயங்கரவாதத்தை விட பயங்கரமானது  எது என, மியா கலிபாவிடம்  கேட்க, அதற்கு அவர் "ஒரு தனி அறையில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத பெண்களுடன் தனிமையில் இருப்பதுதான்"என தெரிவித்தார்.

இந்தப் பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதுடன்  சமூக வலைதளத்தில் பரவி அதிகம் பேரால் கவரப்பட்ட வீடியோவாக வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வேறொரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த மியா கலிபா, ஆபாச திரைப்படத்தில் தான் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே பணியாற்றியதாகவும் இந்த தொழிலில்  சொற்பமாகவே சம்பாதித்ததாகவும் அவர் மனம் திறந்து பேசியிருந்தது குறிப்படதக்கது.
 

click me!