தலைக்கேறிய மதுபோதையால் பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொண்ட இளைஞன்..!

By vinoth kumarFirst Published Jul 21, 2019, 3:28 PM IST
Highlights

லண்டனில் திருடன் ஒருவன் தலைக்கேறிய மதுபோதையில் பிணவறைக்குள் சென்று அங்கிருந்த பிணங்களுடன் உடலுறவு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டனில் திருடன் ஒருவன் தலைக்கேறிய மதுபோதையில் பிணவறைக்குள் சென்று அங்கிருந்த பிணங்களுடன் உடலுறவு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லண்டனை சேர்ந்தவர் கசீம் குரம் (23). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதால் அவ்வப்போது ஜெயிலுக்கு சென்று வந்தார். சிறையில் இருக்கும்போது அவருக்கு போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும் மது, கஞ்சா போன்ற பல்வேறு போதை பழக்கங்களும் அடிமையாகி இருந்தார். 

இந்நிலையில், ஒருநாள் மதுபோதை தலைக்கேறி அப்பகுகுதியில் உள்ள ஒரு பிணவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பிணங்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதை கண்ட ஊழியர்கள், இந்த விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரித்த போது நெக்ரோபிலா எனப்படும் ஒருவகையான நோய் இருப்பவர்களுக்கு இறந்த பிணங்களின் மீது தான் ஈர்ப்பே இருக்கும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் போதையில் இருந்ததால் அவ்வாறு நடந்து கொண்டாதாக கூறினார். இதனையடுத்து, நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது. 

click me!