நடுவானில் பறந்த விமானத்தில் இளம் ஜோடி உடலுறவு... முகம் சுளித்த பயணிகள்..!

By vinoth kumarFirst Published Jun 23, 2019, 11:11 AM IST
Highlights

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் குழந்தைகள் கண்முன்னே இளம் ஜோடிகள் உடலுறவு மேற்கொண்ட சம்பவம் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் குழந்தைகள் கண்முன்னே இளம் ஜோடிகள் உடலுறவு மேற்கொண்ட சம்பவம் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அதில் குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது உடலுறவு மூடிற்கு வந்த ஒரு தம்பதி ஒன்றாக பாத்ரூமிற்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில் பாத்ரூமிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதனால், உடலுறவு ஆசையை அடக்க முடியாத அவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே தங்களது சில்மிஷம் செய்ய துவங்கிவிட்டனர். அந்த விமானத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் இருந்தும் அவர்கள் அதை நிறுத்தவில்லை. விமானப்பணி பெண்கள் அவர்களிடம் சென்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் செய்யும் "சேட்டை"யை நிறுத்துவதாக இல்லை. இதனால் குழந்தைகளுடன் வந்திருந்த மற்ற பயணிகளுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை தள்ளப்பட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் எல்லாம் வேறு சீட்டில் அமர வைக்கப்பட்டனர். அதன் பின்பும் அவர்கள் அதை தொடர்ந்து கொண்டிருந்தததால் விமானப்பணி பெண்கள் அவர்களை சுற்றி கர்டன் வைத்து அவர்கள் செய்வது மற்றவர்களுக்கு தெரியாத படி பார்த்துக்கொண்டனர். பின்னர், விமானம் துருக்கியில் தரையிறங்கியதும் அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நடுவானில் பறக்கும் விமானத்தில் மற்றவர்கள் முன்னிலையில் தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. 

click me!