ஒட்டல் அறையில் காதல் ஜோடி தாறுமாறு உடலுறவு..!! கதவுக்கு அருகில் ஒட்டுக்கேட்டு சல்லாபித்த சைகோ..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 10, 2019, 1:56 PM IST
Highlights

அப்போது தரையில் ஊர்ந்தபடி ஒவ்வொரு அறையாக செல்லும் நபர்,  ஒவ்வொரு அறை கதவு வாசலிலும் நின்று, தொலைபேசியை வைத்து உள்ளே என்ன நடக்கிறது  என்ற ஆடியோவை அவர் பதிவு செய்வது போல காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனையடுத்து அக்காட்சிகளை வைத்து 28 வயதுடைய அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

ஓட்டல் அறையில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியரின் ஆடியோவை காம எண்ணம் கொண்ட ஓட்டல் ஊழியர் ஒருவர் பதிவு செய்யும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது  ஹோட்டல் அறைக்குள் உடலுறவு கொள்ளும் தம்பதியரின் சத்தத்தை கேட்பதற்காக மாடிப் படிக்கட்டுகளில் ஊர்ந்து சென்று தம்பதிகள் தங்கியிருக்கும் அறையின் கதவில் காதுகளை வைத்து உடலுறவு சத்தத்தை கேட்டு ரசிப்பதுடன், அச்சத்தத்தை ரெக்கார்டு செய்யும் ஹோட்டல் ஊழியரின் செயல் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது .

 

உடலுறவில் ஈடுபட்டிருந்த தம்பதியகள் தங்கள் அறைக்கு வெளியே நிழல் இருப்பதை உணர்ந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் கூறினார்.  இதையடுத்து சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆராய்ந்து பின் அதனடிப்படையில்  ஓட்டலில் பணியாற்றிய 28 வயதுடைய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்நபர்,  தன் பக்கத்து அறையில் உடலுறவு கொள்வது போன்ற ஆபாசமான முனகல் கேட்டதால் அதை  கேட்டு சல்லாபிக்க தான் அப்படி நடந்து கொண்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.  அதாவது  தென்மேற்கு சீனாவின்  சோங்கிங்கின் ஜியாங்ஜின்  மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.  செல்வி டாங்,  என்ற பெண் தனது காதலனுடன் ஹோட்டலில் தங்கி இருந்தார்.  அப்போது நள்ளிரவில் தங்கள் அறைக்கு வெளியே யாரோ ஒருவர் இருப்பதை போன்று நிழலாடியது, இதை கவனித்த அவர்,  

ஹோட்டல் அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும்  புகார் கொடுத்தார்.  உடனே அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.  அப்போது தரையில் ஊர்ந்தபடி ஒவ்வொரு அறையாக செல்லும் நபர்,  ஒவ்வொரு அறை கதவு வாசலிலும் நின்று, தொலைபேசியை வைத்து உள்ளே என்ன நடக்கிறது  என்ற ஆடியோவை அவர் பதிவு செய்வது போல காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனையடுத்து அக்காட்சிகளை வைத்து 28 வயதுடைய அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் உடல் மற்றும் உளவியல் ரீதியான தேவைகளுக்காக அந்த நபர் இப்படி நடந்து கொண்டதாகவும்.  தம்பதியர் மற்றும் காதல் ஜோடிகளின் உல்லாசத்தை நோட்டமிடுவதுடன், அவர்கள் எழுப்பும் சத்தத்தை பதிவு செய்து அதில் இன்பம் காணும் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என்று தெரிவித்துள்ளனர்.  அந்த நபர் அடிக்கடி இதற்காக ஓட்டலுக்கு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர். இது போன்று ஏராளமான ஆடியோ பதிவுகளை அந்நபரிடம் இருந்து கைப்பற்றியுள்ளதுடன் அவரை சிறையிலடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 
 

click me!