2  கல்யாணம் பண்ணலைன்ணா  ஜெயிலுக்கு போவது உறுதி….! இந்த வசதி எங்கே!!

First Published Jan 31, 2018, 10:53 PM IST
Highlights
2 wives must in erithriya.or go to jail


வட கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்திரியாவில்  ஆண்கள் இரண்டாவது திருமண்ம் செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி பெரும் குற்றமாக கருதப்படுகிறது. 2 முறை திருமணம் செய்யும் ஆண்களுக்கு சிறை தண்டனை உறுதி. அந்த ஆண் அரசு வேலையில் இருந்தால் வேலையும் பறிபோகும்.

இது போன்ற கடுமையான சட்டங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமலில் இருக்கும்போது, வட கிழக்கு ஆப்ரிக்க நாடான  எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது

இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மேலும் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!