life-style

தண்ணீர் எப்போது மருந்தாக, விஷமாக மாறும்?

ஒவ்வொரு ஜீவராசியும் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீரின்றி உலகில்லை. பூமியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர். ஒரு பகுதி நிலம். 

Image credits: adobe stock

எப்போது நீர் அருந்தக்கூடாது?

சாணக்கியர் சிறந்த அறிஞர்களில் ஒருவர். தவறான நேரத்தில் தண்ணீர் குடிப்பது எப்படி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை விளக்கியுள்ளார். அவர் என்ன சொன்னார் என்று பார்க்கலாம்.

எப்போது தண்ணீர் குடிக்கலாம்

செரிமானமின்மை என்றால் தண்ணீர் குடிப்பது மருந்து. வயதானவர்களுக்கு தண்ணீர் வலிமை தரும். உணவுடன் சிறிது தண்ணீர் அமிர்தம் போன்றது. சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது விஷம் என்கிறார்.

நீர் எப்போது மருந்தாகும்?

செரிமானமின்மை, அதாவது உணவு செரிக்காத போது தண்ணீர் குடிப்பது மருந்தாகும். அதாவது இந்த நேரத்தில் குடிக்கும் தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது.

முதியோருக்கு நீர் அவசியம்

முதியவர்கள் அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.இதன் மூலம் அவர்களுக்கு உடல்  வலிமை கிடைக்கும். முதுமையில் குறைவாக சாப்பிட்டு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

தண்ணீர் எப்போது அமிர்தமாகும்

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் குடிக்கலாம், ஆனால் அதிகமாக கூடாது. இந்த நேரத்தில் குடிக்கும் நீர் நமக்கு அமிர்தமாகும்.

நீர் எப்போது விஷமாகும்?

ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு செய்வது விஷமாகும். அதாவது அது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். 

Find Next One