life-style
அடிப்பிடித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் மற்றும் எலுமிச்சை தோல் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கடாயில் தீஞ்சி போனது தானாகவே வெளியேறிவிடும்.
அடிப்பிடித்த பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை தூவி சிறிது தண்ணீர் தெளித்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு ஸ்க்ரப் கொண்டு சுத்தம் செய்யவும்.
எரிந்து பாத்திரத்தில் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும் அல்லது கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஸ்க்ரப்பர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அடிப்பிடித்த பாத்திரத்தில் சோப்பு, செங்கல் பொடி சேர்த்து சுத்தம் செய்தால் எண்ணெய் பசை மற்றும் பாத்திரத்தில் அடிப்பிடித்து இருக்கும் கறை மறைந்து போவதை நீங்கள் காண்பீர்கள்.
பேக்கிங் சோடா, வினிகர் கொண்டு பேஸ்ட் போல் தயாரித்து அதை அடிபிடித்த பாத்திரத்தின் மீது தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு ஸ்கிராப் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
எரிந்த பாத்திரத்தில் சோடா அல்லது குளிர்பானத்தை ஊற்றி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு ஸ்கிராப் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.