Exclusive : அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி!

Sep 11, 2022, 1:23 PM IST

செப்டம்பர் 11, 2001 ஆண்டு நான்கு அமெரிக்க விமானங்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர், நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர், இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் வீதிகளில் இந்தத் தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.