"டியூட்டில இருக்கிற எங்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை" வலுக்கட்டாயமாக இராணுவ வீரர்களை அடித்த போலீஸ்..!! பரபரப்பு பேட்டி..

Aug 19, 2019, 6:18 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை பகுதியில் ஆகஸ்ட் 15 அன்று ராணுவ வீரர்களது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்காக இராணுவ வீரர்கள் சென்ற போது அவர்களிடம் போலீசார் அநாகரீகமாக நடந்த  குமரி ஜவான் அமைப்பை சேர்ந்த ராணுவ வீரர்கள் அருண் மற்றும் ஜோசப் சாண்டினோ ஆகிய இரண்டுபேரை அவதூறாக பேசி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து  தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமரி ஜவான் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர் அதன் பின்னர் செய்தளர்களை சந்திபியில் பேசிய போது