மொத்த பணத்தையும் எடுத்துக் கொடுத்த போலீஸ்.. நெகிழ்ந்து போன அப்பகுதி மக்கள்..!

Sep 12, 2019, 6:02 PM IST

வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளியை சேர்ந்த செந்தில் என்பவர் 11/09/2019 நேற்று  படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவரின் மனைவி மற்றும் தாயாரும் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் 

இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த வேதாரண்யம் DSP சபியுல்லா அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அவரின் மூன்று குழந்தைகளுக்கும் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறி இறந்த செந்திலின் இறுதி சடங்கிற்கு தனது மனிபர்சை எடுத்து DSP சபியுல்லா அதில் உள்ள மொத்த பணத்தையும் கொடுத்ததார் இந்த நிகழ்வை பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்