புரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..! வீடியோ

Sep 18, 2019, 1:00 PM IST

தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல  மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இதனால், அந்த மாதத்தை சூட்டை  கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள். அசைவம் ஆகாது இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம்  சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம்  அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும்  வழக்கத்தை ஏற்படுத்தினர்.

அந்த வகையில் புரட்டாசி மாதம் ஆன இன்று காலையிலேயே பெருமாள் கோவில்களிலும், காய்கறிகள் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.