உடும்பை விழுங்கிய ராட்சத நாகம்; வனத்துறையினர் மீட்பு

Oct 3, 2022, 12:16 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் ராட்சத நாகப்பாம்பு ஒன்று உணவு ஜீரணமாகாமல் தவிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், பாம்பை மீட்டனர். இதனைத் தொடர்ந்து பாம்பு  உணவு ஜீரணமாகாமல் வெளியேற்றயபோது 3 அடி நீளமுள்ள உடும்பு வெளியே வந்ததைப் பார்த்த வனத்துறையினர் ஆச்சரியமடைந்தனர்.