Watch : உக்கடம் பெரிய குளத்தில் விரைவில் படகு சவாரி!

Watch : உக்கடம் பெரிய குளத்தில் விரைவில் படகு சவாரி!

Published : Jul 07, 2022, 04:40 PM IST

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமாக்கப்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

கோவை மாவட்டம், உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கை நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளி அரங்கம் விளையாட்டு திடல், உணவுக்கூடங்கள், படகு துறை மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

செல்வ சிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும் வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டது. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

இக்குளங்களில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் படகு சவாரி தொடங்கப்பட இருக்கிறது. இதையொட்டி, மிதிவண்டி படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், படகு இல்லம் திறப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
 

06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!
06:13திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !
03:51வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!