Watch : கடலூர் & மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

Nov 14, 2022, 11:22 AM IST

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டங்கள், மற்றும் பல்வேறு பகுதிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று
கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.