Watch : கரை புரண்டோடும் காவிரி ஆறு! கட்டளை காவிரி ஆற்றில் மேயர் ஆய்வு!

Watch : கரை புரண்டோடும் காவிரி ஆறு! கட்டளை காவிரி ஆற்றில் மேயர் ஆய்வு!

Published : Jul 19, 2022, 05:49 PM IST

கரூர் கட்டளை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கரூர் மாவட்டத்தில் மாயனூரில் காவிரி ஆற்றின் கதவணைக்கு 1,16,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,15,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
 

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பாக கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் கதவணைக்கு வினாடிக்கு 1,16,,400 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 1,15, 400 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாயனூர் கதவணையில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 400 கன அடியும் பாசத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கட்டளை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
 

06:06பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!
07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!