வேலூரில் மட்டின் காலில் வெற்றிகரமாக பிளேட் பொருத்திய அரசு மருத்துவர்கள்

Jan 12, 2023, 2:28 PM IST

வேலூரில் உள்ள மாவட்ட கால்நடை பெரு மருத்துவமனை கடந்த 9ம் தேதி வாணியம்பாடி வெள்ளை குட்டை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடைய பந்தய எருது பல்வேறு எருது விடும் திருவிழாவில் பங்கேற்று முதல் பரிசினை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி ஆந்திர மாநிலம் பெத்தூர் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் பங்கேற்று இரண்டாம் பரிசினை பெற்றது. அதன் பின்னர் அருகில் இருந்த கால்வாயில் விழுந்ததனால் எருதின் முன் காலில் முறிவு ஏற்பட்டது.

எருதுவின் உரிமையாளர் பாபு மாட்டினை உடனடியாக மீட்டு வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ரவிசங்கர் மற்றும் நாசர் ஆகியோர் காயமடைந்த மாட்டின் எலும்பை சீர்படுத்தி 10 cm அளவு கொண்ட இரும்பு பிளேட்டை வெற்றிகரமாக பொருத்தினர்.