பாஜகவை தோற்கடிப்போம், இந்திய கூட்டணியை ஆதரிப்போம்; திருச்சியில் திருமாவளவன் முழக்கம்

Jan 8, 2024, 1:20 PM IST

திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பிஜேபியை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம் என்ற முழக்கத்தின் பேரணி மற்றும் மாநாடு புத்தூர் நான்கு ரோட்டில் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கவும், பாஜகவுக்கு எதிராக திரண்டு உள்ள திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக உறையூர் கடைவீதியில் இருந்து பேரணி புறப்பட்டு மாநாடு நடக்கும் இடமான புத்தூர் நால்ரோடு வந்தடைந்தது. இதில் ஏராளமான மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.