நெல்லையில் ஒரு நீயா? நானா? வென்றது திமுகவா? காங்கிரஸா? விவாதத்தை முடித்து வைத்தது இவர்தான்!!

நெல்லையில் ஒரு நீயா? நானா? வென்றது திமுகவா? காங்கிரஸா? விவாதத்தை முடித்து வைத்தது இவர்தான்!!

Published : Sep 23, 2022, 08:54 PM IST

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனும் இந்த கோரிக்கை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். அதே சமயம் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருமான அப்பாவு தனது பகுதிக்கு உட்பட்ட வள்ளியூரில் தான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைய வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இறுதியில் ஆளுங்கட்சி என்பதால் தற்போது வள்ளியூரில் தலைமை மருத்துவமனை அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில் இன்று நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விழா மேடையில் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் பேசும்போது, ''அமைச்சர் மா.சுப்ரமணியன் துடிப்பாக செயல்பட்டு வருகிறார். எப்படியும் நமது பகுதிக்கு தலைமை மருத்துவமனை வராது. இருந்தாலும் அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை வைப்போம் என்ற அடிப்படையில் நாங்குநேரியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைத்து தர வேண்டும்'' என்றார். 

அதற்கு அடுத்தபடியாக சபாநாயகர் அப்பாவு பேசும்போது வழக்கம் போல் தமிழக முதல்வரை பாராட்டி பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''எல்லோருக்கும் பொதுவாக வள்ளியூரில் தலைமை மருத்துவமனை அமைய உள்ளது. களக்காடு நாங்குநேரி வள்ளியூர் மக்கள் பயன்பெறுவார்கள். இது என் ஊர் உன் ஊர் என்று இல்லை. எல்லோருக்கும் பொதுவானது'' என்று ரூபி மனோகரனை உசுப்பேத்தும் வகையில் பேசினார்.

இருவரும் அமைச்சர் முன்னிலையில் மருத்துவமனை கேட்டு நீயா நானா போட்டியில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்கச் செய்தது. இறுதியாக இருவருக்கும் பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசினார். அவர் பேசும்போது, ''நாங்குநேரியில் அரசு தலைமை மருத்துவமனை வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கேட்டுக்கொண்டார். வள்ளியூரில் அதை அமைக்க வேண்டுமென சபாநாயகர் கேட்டுக்கொண்டார். 

எனவே மருத்துவ அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இரு இடங்களில் தலா 45 கோடி ரூபாயில் அரசு தலைமை மருத்துவமனை அமைய உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என்று விதி உள்ளது. ஆனால் நெல்லையில் பல்வேறு தரப்பட்ட மக்கள் இருப்பதால் இரண்டு மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இருப்பினும் நாங்குநேரி தொகுதி மக்கள் நலனுக்காக அங்கு ரூ.10 கோடியில் விபத்து பிரிவு மருத்துவமனை அமைக்கப்படும்'' என்று கூறி விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 

01:16Viral Video: நெல்லையில் மனநலம் பாதித்த கணவனை கம்பால் தாக்கி கொடுமை படுத்திய பெண்; வீடியோ வெளியாகி பரபரப்பு
00:24எமன் ரூபத்தில் வந்த மாடு.. பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் துடிதுடித்து பலி! வெளியான பகீர் வீடியோ!
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
00:58பஸ் போகாது போனா தண்ணீரில் மாட்டிக் கொள்ளும்! எச்சரித்த நபர்! உதாசீனப்படுத்திய ஓட்டுநர்!இறுதியில் அலறிய பயணிகள்
04:35கம்பியில் சுற்றப்பட்ட உடல்.. வாயில் இருந்த Scrubber.. ஜெயக்குமாரின் மர்ம மரணம் - ஐஜி கண்ணன் கொடுத்த தகவல்!
04:41நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம்.. கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்..
08:41அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
05:14நீ எல்லாம் ஒரு அமைச்சரா? அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?
01:4925 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்
00:52கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்