நெல்லையில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழப்பு

Sep 29, 2022, 2:59 PM IST

தமிழகம் முழுவதும் குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரவி வந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் மர்ம காய்ச்சல் என்பதால், பிற மாணவிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் பெற்றோர் உள்ளனர்.