நெல்லையில் PFI அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

Oct 1, 2022, 7:32 PM IST

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அந்த அமைப்புக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே அப்பகுதியில் பலத்த போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.