நெல்லையில் ரூ.43 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்

Sep 27, 2022, 4:51 PM IST

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேலப்பாளையம் 43 வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில்  புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.