நெல்லையில் பர்தா அணிந்து செயின் பறிப்பு; கையும் களவுமாக சிக்கிய வடமாநில பெண்களால் பரபரப்பு

Feb 10, 2023, 5:35 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே ஒரு பேருந்தில் பர்தா அணிந்த மூன்று வட மாநில பெண்கள் ஒரு வயதான பெண்மணியிடம் கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளனர். இதனைப் பார்த்த சக பயணி ஒருவர் உடனடியாக மூன்று பேரையும் பிடிக்க முற்பட்டபோது ஒரு பெண் தப்பி ஓடி விட்டார். மற்ற இருவரையும் கையும், களவுமாக பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். செயின் பறிப்பு குறித்து காவல் துறையினர் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.