காவல் நிலையம் எதிரிலேயே திருட முயன்ற கரடி; முயற்சி தோல்வியடைந்ததால் கரடி சோகம்

Apr 11, 2023, 10:08 AM IST

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள், காட்டெருமைகள், சிறுத்தை, புலி, கரடி, மான் போன்ற அனைத்து விலங்குகளும் அவ்வபோது காட்டை விட்டு வெளியேறி நகர் பகுதிக்கு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வலம் வருவது வழக்கம்தான்,

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் காவல் நிலையம் எதிரில் உள்ள டீக்கடையை இன்று அதிகாலை 4 மணி அளவில் கரடி ஒன்று கடையின் கதவுகளை உடைக்க முயற்சி செய்தது. இறுதியில் கதவின் ஒரு பலகை மட்டும் உடைந்த நிலையில் அதன் பிறகு கடையை கரடியால் திறக்க முடியவில்லை.

இதனால் தோல்வியை தழுவிய கரடி அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.