video : கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற 60 வயது முதியவர்... விளையாடிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த பரிதாபம்

Apr 23, 2023, 10:25 AM IST

உதகை திறந்தவெளி மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக 40 முதல் 60 வயது உடையோருக்கான கூடைப்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவை - மதுரை அணிகளுக்கு போட்டிகள் நடந்தன. அப்போது மதுரை அணியை சேர்ந்த நேரு ராஜ் (60)விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மைதானத்தில் இருந்தவர்கள் அவரை எழுப்ப முயற்சிப்பதற்குள் அவர் அங்கேயே உயிரிழந்தார். இதை அடுத்து அவரது உடல் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே கூடைப்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மற்ற வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த வீரருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்படாது என கூடைப்பந்து சங்க நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.