மதுரை மத்திய சிறையில் நடைபெற்ற காவலர்களின் கௌரவ அணிவகுப்பு

Sep 30, 2022, 12:49 PM IST

சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடியரசுத் தலைவரின் சுதந்திர தினப் பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டிற்கான குடியரசுத் தலைவரின் சுதந்திர தினப் பதக்கம் மதுரை மத்திய சிறையில் பணியாற்றி வரும் உதவி சிறை அலுவலர்களான ஜவகர் மற்றும் முனிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிறைத்துறை காவலர்கள் சார்பில் மத்திய சிறையில் உள்ள மைதானத்தில் காவலர்கள் அணிவகுப்பு  சிறப்பாக நடைபெற்றது. அதன்பின்னர் மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்ட கம்பளி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்டவைகளை சிறைத்துறை துணைத் தலைவர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.