Watch : காங்கிரஸ் போரட்டத்தில் காங்., பாஜக இடையே மோதல்- கல்வீச்சு, அடிதடியால் பரபரப்பு!

Apr 3, 2023, 11:24 PM IST

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்ததை தொடர்ந்து அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது இந்நிலையில் இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம்,  நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அங்கிருந்து பாஜகவினர் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டினர். இந்நிலையில் அருகில் கிடந்த கற்களை மாறி மாறி எடுத்து வீசி எரிந்தனர். அதில் பேருந்து பக்கத்து கடைகள் எல்லாம் சேதமடைந்தது இதனால் இருவரின் மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.