பிரதமர் மோடியின் பெயரை சொல்லி தங்க தேர் இழுத்த ஓ.பன்னீர்செல்வம்

Mar 18, 2024, 10:20 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரனுடன் சந்திக்கவுள்ளார்.  மேலும், இந்த கூட்டணி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.  

அடிவாரத்தில் தனியார் விடுதியில் ஓய்வெடுத்த அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின்னர் மாலையில் ரோப்கார் மூலம் மலைக்கு சென்ற அவர் தண்டாயுதபாணி சுவாமியை இராஜ அலங்காரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தங்கத்தேர் புறப்பாட்டிலும் பங்கேற்றார். 

தங்கத்தேருக்கு அவரது பெயரிலும், பாரத பிரதமர் மோடி பெயரிலும் பணம் செலுத்தி தங்கத்தேர் இழுத்தது குறிப்பிடத்தக்கது.  அவருக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக அதிமுக கொடி, லெட்டர் பேட், இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்.சுக்கு நீதிமன்றம் மீண்டும் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் புன்னகைத்தபடியே கடந்து சென்றார்.