உழவர் சந்தையில் மாம்பழம் விற்று பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரிப்பு!

Apr 7, 2024, 6:56 PM IST

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா இரண்டாவது நாளாக பழனியில் உழவர் சந்தை, நகராட்சி தக்காளி மார்க்கெட்,  பேருந்து நிலையம், காந்தி சிலை, ஆயக்குடி, கலிக்கநாயக்கன்பட்டி,கோதைமங்கலம் உள்ளிட்ட இடங்களில்  வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில், பழனி உழவர் சந்தையில் நீராபானம், மாம்பழம் விற்பனை செய்து பாமக வேட்பாளர் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி, மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, பழனி பகுதியில் கொய்யா மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அப்போது அவர் உறுதியளித்தார்.