சென்னையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்களை தேடி அலையும் உரிமையாளர்கள்

Dec 12, 2023, 4:10 PM IST

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. இதன் ஒரு பகுதியாக வீடுகளுக்கு வெளியே, சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், சென்னை முடிச்சூர் பகுதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் அருகில் உள்ள குட்டை ஒன்றில் குவிந்து கிடக்கின்றன. கார்களின் உரிமையாளர்கள் அங்கு படையெடுத்து தங்கள் காரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இணையத்தில் தற்போது இந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.