சென்னை அருகே சொகுசு கார் தீ பிடித்து விபத்து

Oct 1, 2022, 4:56 PM IST

சென்னை தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை, திருநீர்மலை அருகே சாலையில் வந்து கொண்டிருந்த சொகுசு காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் சதீஷ், காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு அவரும் காரில் பயணித்த பிரதீப் என்பவரும் உடனடியாக காரில் இருந்து இறங்கினர். 

இறங்கிய சிறிது நேரத்தில் கார் தீ பற்றி  எரியத் தொடங்கியது, பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தாம்பரத்தில் இருந்து விரைந்து வந்தனர். இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே கார் முற்றிலும் எரிந்து சேதமைடைந்தது. இதனால் தாம்பரம் , மதுரவாயல் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.