சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம் தொடக்கம்

Feb 1, 2024, 7:32 PM IST

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்வில், மாநகராட்சியைச் சேர்ந்த 23 பள்ளிகளில் எல் கே ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உடற்கல்வியை வழங்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 

சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன், கார்த்திக் மோகன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு காலை, மாலை வேளைகளில் 12,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. நிகழ்வின் தொடக்கமாக மாணவர்களுக்கு உடற்கல்விக்கான உபகரணங்களை எம் கே மோகன் வழங்கினார்.