VIDEO | திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் குருவார பிரதோஷம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Jun 16, 2023, 8:59 AM IST

வைகாசி மாத குருவார தேய்பிறை பிரதோஷ தினத்தில் அக்னி ஸ்தலத்தில் சுயமாக தோன்றிய அருணாச்சலேஸ்வரர் திருத்தலத்தில் வீற்றிக்கும் 5 நந்தி பெருமானை பிரதோஷ காலத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

ஆயிரம்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், அபிஷேகத் தூள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து வில்வ இலைகள் மற்றும் மலர்களால் நந்தி பகவான் அலங்கரிக்கப்பட்டு மலர்கள் மற்றும் வில்வ இலைகளால் அபிஷேகமும் தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டது ஏராளமான பக்தர்கள் வைகாசி மாத குருவார தேய்பிறை பிரதோஷத்தில் நந்தி பகவானை வழிபட்டனர்.