உலக நன்மை வேண்டி நடைபெற்ற 508 திருவிளக்கு பூஜை

Oct 1, 2022, 12:00 PM IST

நவராத்திரி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரையில் பழமையான கபாலீஸ்வரி அம்மன் கோவில் சார்பில் உலக நன்மை வேண்டி 508  திரு விளக்கு பூஜை நடைபெற்றது.

வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விளக்கு பூஜை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விளக்கு பூஜையின் முடிவில் கபாலீஸ்வரி  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.