தமிழ்நாடு, தமிழகம் வேறுபாடு கிடையாது.! பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்? திருமாவளவன் விளக்கம்

Jan 8, 2023, 7:27 PM IST

நெல்லை, பாளையங்கோட்டை தூய  சவேரியார் கல்லூரியில் வைத்து மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய திருமாவளவன், பொங்கல் பண்டிகை அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் விழா.  இந்த விழா சமூக சமத்துவ நல்லிணக்க திருவிழாவாக திகழ்கிறது மதச்சார்பற்ற புராணக்கதை பின்னணி இல்லாமல் எந்த வித பிணைவும் இல்லாமல் கலாச்சாரத்தை பேசும் விழாவாக திகழ்ந்து வருகிறது. நல்லதுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் வெறுப்பு அரசியலை பரப்புவதற்கு இணக்கமாக இருக்கக் கூடாது.

தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும்,  அம்மா என்றாலும் ஒரே பொருள் தான் உள்ளது. தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும், அரசியலும் சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும், ராஸ்டரியம் என்றாலும் நாடு என்பதுதான் பொருள், இந்த தேசத்திற்கு இந்து ராஷ்டம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.

மகாராஷ்டிராத்தில் சென்று  பாரதம் என்று தான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா ? என்று கேள்வி எழுப்பினார். தமிழக முதலமைச்சருக்கு சிறுபான்மையினர் சமூக மக்கள் தன்னிடம் வைத்த கோரிக்கையை முன் வைக்கிறேன். அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படுவதில்லை என அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன் அங்கீகாரம் கிடைத்த பள்ளிகளுக்கு அரசாணை வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க..ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறை