தவழ்ந்து தவழ்ந்து தான் உயர்ந்த பதவிக்கு வந்தேன் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

Jan 8, 2024, 7:51 PM IST

எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரை மாவட்டத்தில் மதசார்பின்மை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மு.க.ஸ்டாலின் கருணாநிதியால் முதல்வராகவும், கட்சியின் தலைவராகவும் வந்துள்ளார். நான் முதலமைச்சராவேன் என கனவில் கூட நினைத்தது கிடையாது. 

உங்களை போல் நானும் ஒரு தொண்டனாக தான் இருந்து கொண்டிருந்தேன் என்னுடைய கடின உழைப்பால், தவழ்ந்து தவழ்ந்து வந்து தான் இந்த உயர்ந்த பதவியை அடைந்துள்ளேன் என்றார்.