Earthquake Video: ஏதோ தப்பா இருக்கு; நிலநடுக்கத்தை உணர்ந்து அலறியடித்து எழுந்த யானை - வீடியோ வெளியாகி பரபரப்பு

Jun 17, 2024, 12:07 PM IST

கேரள மாநிலம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அணைக்கரை, கப்பூர், திருமிடக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலஅதிர்வு சில நொடிகள் மட்டும் உணரப்பட்ட நிலையில் குன்னம் குளத்தில் உள்ள பரன்னூர் என்னும் பகுதியில் உள்ள வளர்ப்பு யானை நந்தன் நிலநடுகத்தை உணர்ந்து தூங்கிக் கொண்டிருந்த  யானை எழுந்து நிற்கும் சி.சி.டி.வி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.