கல்லூரிக்குள் மாணவிகளிடம் எல்லை மீறிய மாணவர்கள்.. ஓட ஓட ஆசிரியரை கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி..!

Nov 6, 2019, 11:30 AM IST

உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பால்கரன்பூர் ஆதர்ஷ் ஜந்தா இன்டர் கல்லூரி ஒன்று செயல்பட்டுவருகிறது அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் அதில் அங்கு படிக்கும் சில மாணவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது 

இதனால் ஆதர்ஷ் ஜந்தா இன்டர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்த மாணவர்களை திட்டியதாக கூறப்படுகிறது இதை தொடர்ந்து ஆத்திரமடைந்த மாணவர்களும் அவர்களின் பாதுகாவலர்களும் ஆசிரியரை சரமாரியாக கட்டையால் தாக்கி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரயாக்ராஜ் காவல்துறை வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்