கார்கில் விஜய் திவாஸ் 2024 : போர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

Jul 26, 2024, 12:46 PM IST

கார்கில் போர் நிறைவடைந்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. கார்கில் போர் வெற்றி தினத்தன்று விஜய் திவாஸ் என்கிற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படும். அந்த நிகழ்வின்போது கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று கார்கில் விஜய் நிவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி போர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அங்கிருந்த ராணுவ வீரர்கள் முன்னிலையில் பேசினார் மோடி. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது.