Watch : மத்தியபிரதேசத்தில் லாரி மோதிய கோர விபத்து! - 6 பேர் பலி!

Dec 5, 2022, 2:53 PM IST

மத்தியபிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டம் சட்ருண்டா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்திற்காக சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த பெரிய டிரக் ஒன்று, நிலைதடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.