"பியூட்டியை கொஞ்சம் கூட்டிய நயன்தாரா" விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியே வெளியிட்ட வைரல் வீடியோ!

Sep 24, 2024, 11:55 PM IST

கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "நானும் ரவுடி தான்". இந்த திரைப்படத்தின் மூலம் தான் பிரபல நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாகவும் மாறியது. இந்த சூழலில் கடந்த 2022ம் ஆண்டு இந்த இரு செலிபிரிட்டிகளும் திருமணம் செய்து கொண்டனர். 

அவர்களுடைய திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் "உயிர்" மற்றும் "உலகு" என்கின்ற இரண்டு ஆண் குழந்தைகளை அவர்கள் பெற்றெடுத்துக் கொண்டனர். இதில் சில சர்ச்சைகள் எழுந்தாலும், இப்போது ஒரு குடும்பமாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 18ம் தேதி விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை துபாய் நாட்டில் பல முக்கிய நண்பர்களோடு இணைந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தனது படங்களில் பிஸியாக நடித்து வரும் அதே நேரம், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களோடு அதிக அளவிலான நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா இப்போது ஒரு அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரது காதில் கூடுதலாக இரண்டு தோடுகளை அவர் இப்போது போட்டுக் கொண்டுள்ளார். அதற்காக ஒரு அழகு நிலையத்திற்கு சென்று அவர் காதுகுத்திக்கொண்ட வீடியோவை தான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.