மகப்பேறு மருத்துவமனை மையங்கள் அமைக்க ரூ.41.34 கோடி நிதி விடுவிப்பு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

Published : Feb 10, 2022, 06:27 PM IST
மகப்பேறு மருத்துவமனை மையங்கள் அமைக்க ரூ.41.34 கோடி நிதி விடுவிப்பு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

சுருக்கம்

தமிழகத்தில் 6 இடங்களில் மகப்பேறு மருத்துவமனை மையங்கள் அமைக்க ரூ.41.34 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 6 இடங்களில் மகப்பேறு மருத்துவமனை மையங்கள் அமைக்க ரூ.41.34 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோபிசெட்டிபாளையம், திண்டிவனம், தாம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர்,தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 6 புதிய மகப்பேறு மருத்துவமனை மையங்கள் அமைக்க ரூ.41.34 கோடி நிதி விடுவிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2021 -2022 சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, இதுக்குறித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், திண்டிவனம், தாம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோபிசெட்டிபாளையம், அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி ஆகிய 6 அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு தலா ரூபாய் 6.90 கோடி வீதம் 6 புதிய கட்டடங்கள் ரூபாய்.41.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கோபிசெட்டிபாளையம், திண்டிவனம், தாம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 6 துணை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய் சேய் நலக் கட்டடங்கள் கட்ட அனுமதி மற்றும் கட்டட பணிகளுக்கு மொத்தம் ரூ. 41.34 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!