சட்டக் கல்லூரி மாணவி நந்தினியிடம் பாஜகவினர் கடும் வாக்குவாதம்...

Sep 19, 2018, 6:24 PM IST

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக நல அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில், மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தை ஆனந்தனுடன் பல முறை போராட்டம் நடத்தி பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனை, பாஜகவினர் கடுமையான வார்த்தைகளால் பேசிய சம்பவம் காரைக்குடியில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நெடுஞ்சாலையில், நந்தினியும், அவரது தந்தை ஆனந்தன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாஜகவினர், அவர்களிடம் கடுமையாக வாக்குவாதம் புரிந்தனர்.நந்தினி, ஆனந்தனையும் அவர்கள் தரக்குறைவாக பேசினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.