தேர்தலை தொற்று பரவல் இல்லாமல் நடத்த ஒத்துழைக்க வேண்டும்... பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!!

Published : Feb 04, 2022, 06:18 PM IST
தேர்தலை தொற்று பரவல் இல்லாமல் நடத்த ஒத்துழைக்க வேண்டும்... பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!!

சுருக்கம்

தொற்று பரவல் இல்லாத தேர்தல் நடத்த பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தொற்று பரவல் இல்லாத தேர்தல் நடத்த பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் காலங்களில் கோவிட் தொற்று பரவாமல் இருக்க மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள நடத்தை விதிகளை அடிப்படையாக கொண்டு, மாநில தேர்தல் ஆணையம் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை கலந்தாலோசித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மீதான கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஏனையோர் பரப்புரை தேர்தல் நடவடிக்கைகளில் பங்குபெறும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்குசேகரிப்பவர்கள், வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகள், சமூக நலம் பாதுகாப்பு தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் நிர்ணயித்துள்ள பொருத்தமான கொரோனா நடத்தை முறைகள் மற்றும் பொதுவான அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை முதற்கடமையாக கவனத்தில் கொள்ள வேண்டும். சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள், மோட்டார் வண்டிகள் ஊர்வலம் ஆகியவை வரும் 11 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு அறிவுரைகள் வழங்கும். அரசியல் கட்சிகளின் ஊர்வலம், குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் ஊர்வலங்களாக செல்ல வரும் 11 ஆம் தேதி அனுமதிக்கப்பட மாட்டாது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு அறிவுரைகள் வழங்கும். இருப்பினும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றும் அடிப்படையில் அவ்வப்போது வாக்கு சேகரிக்கும் காலத்தில் தேர்தல் ஆணையம் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு பேரணி நடத்த மீள ஆய்வு செய்யும். நியமிக்கப்பட்ட திறந்தவெளி மைதானத்தில் அரசியல் கட்சி அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் 1000 பேர் அல்லது கூட்ட திடலின் கொள்ளளவிற்கு 50 சதவீதம் மக்கள் அல்லது அவற்றில் குறைவான எண்ணிக்கையுடன் கூட்டம் நடத்த அனுமதியளிக்க முடிவெடுத்துள்ளது. உள் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் அல்லது உள் அரங்க கூட்டத்தின் கொள்ளளவை பொறுத்து 50 சதவீதம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளபடி உள்ளரங்கு கூட்டம் நடத்தப்படும் போது மாவட்ட தேர்தல் அலுவலரால் தேர்தலின் போது கோவிட் தடுப்பு தொடர்பான பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தொடர்பு அலுவலரிடமிருந்து உரிய சான்று வழங்குவதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பவர்களின் எண்ணிக்கை வரையறை உயர்த்தி பாதுகாவலர்கள் நீங்கலாக 20 பேரை அனுமதிக்க முடிவு எடுத்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும், பொதுமக்களும் கோவிட் 19 பொருத்தமான நடத்தை முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைகளை இணக்கமாக கடைபிடிப்பதை உறுதி செய்தல் வேண்டும். 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே உள்ள கடந்த டிசம்பர் 10ம் மற்றும் கடந்த 25ம் தேதி நாளிட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ள ஏனைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கோவிட் 19 தொற்று பரவல்  இல்லாத தேர்தலாக தேர்தல் ஆணையம் நடத்திட அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்களும் அனைத்து வகையிலும்,  தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!