மக்களே… டோன்ட் மிஸ்…! இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

By manimegalai aFirst Published Oct 10, 2021, 7:33 AM IST
Highlights

தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.

சென்னை: தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் முக்கிய கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு தொடங்கியது. இதுவரை 4 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணிக்கு 5வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.

மொத்தம் 30 ஆயிரம் முகாம்களில் இன்று தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி உள்ளன. 40 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் அந்தந்த மையங்களுக்கு ஏற்கனவே பிரித்து அனுப்பப்பட்டு விட்டன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என முக்கிய இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் இரவு 7 மணி வரை நடைபெறும்.

click me!