முதல் முறையாக ஆடவர் இரட்டையரில் கிராண்ட்ஸ்லாம் டைட்டில் வென்று 43 வயதான ரோகன் போபண்ணா சாதனை!

Published : Jan 27, 2024, 08:41 PM IST
முதல் முறையாக ஆடவர் இரட்டையரில் கிராண்ட்ஸ்லாம் டைட்டில் வென்று 43 வயதான ரோகன் போபண்ணா சாதனை!

சுருக்கம்

முதல் முறையாக ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் டைட்டில் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்களுக்கான இரட்டர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது இத்தாலியின் சைமன் போலேலி மற்றும் ஆண்ட்ரியா வாவசேரி ஜோடியை எதிர்கொண்டது.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 7-6 (0), 7-5 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா ஜோடியானது வெற்றி பெற்று ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டைட்டில் வென்றுள்ளது. இதன் மூலமாக 43 வயதான வீரராக கிராண்ட்ஸ்லாம் வென்று ரோகன் போபண்ணா சாதனை படைத்துள்ளார். அதோடு ஆடவர் இரட்டையரில் அவர் கைப்பற்றிய முதல் கிராண்ட்ஸ்லாம் டைட்டில் இதுவாகும்.

இதற்கு முன்னதாக கடந்த 2013 மற்றும் 2023 ஆம் ஆண்களில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியோடு திரும்பி வந்தார். இந்த நிலையில் தான் இந்த ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் வயதான வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா டைட்டில் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test: படிக்கல், ஜுரல் அசத்தல் சதம்! ரன்மலையைக் குவித்த இந்தியா
TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!